Friday, January 30, 2009

உறையும் குளிருக்குள்ளும் உணர்வு பொங்கி வழிந்த காட்சிக்கள்!








Torontoவில் இன்று வெள்ளி நண்பகல் 12 மணியளவில் Downtown பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என் அறிவிக்கப்பட்டது. 1 மணியளவில் 24 செய்திச் சேவை அங்கிருக்கும் நிலமையை "நூற்றுக்கணக்கானவர்களே பங்கு பற்றியிருப்பதாகவும், அதை ஒழுந்கு செய்தவர்கள் 30,000 பேரை எதிர்பார்ப்பதாகவும் கூறியது."

நேரம் செல்லச் செல்ல -14c என்ற உறை குளிர் நிலையிலும் மக்கள் அலை ஒவ்வொரு subway வாயில்களுக்காலும் பொங்கியெழ தொடங்கியது. அதே தொலைக்காட்சி 2.15க்கு அதை 25,000 க்கு மேற்பட்ட மக்கள் என ஊர்யிதம் செய்ததுடன் அதை hailstorm எனவும் வர்ணித்ததாம். எங்கும் மக்கள் வெள்ளம். அதனிடையே பலர் மேளதாள வாத்தியங்களுடனும் சவப்பொட்டி தூக்கியவாறும், தமது சிறிலங்கா எதிப்பைக் காட்டினர்.

இரு இளைஞர்கள் குண்டுத் தாக்கதலில் காயப் பட்டவர்கள் போல் வேடமணிந்து வந்திருந்த ஊடகங்களினதும், மக்களினதும் மனதைக் ஈர்த்ததுடன். தமிழீழ நிலமைகளை மக்கள் கண்முன்னே கொண்டு வந்தார்கள் என பலரும் பேசக் கேட்க முடிந்தது.

0 comments: