Wednesday, September 30, 2009

facebook கிறேசிகள்!

இளையோர்களிடன் சோஷல் நெற்வெக் மோகம் அதிகரித்து வருகிறது சிலர் அதில் பைத்தியம் பிடித்தவர்கள் போலவே அலைகிறார்கள். கைத்தொலைபேசிகளிலும் இந்த வசதிகள் வந்தபின்பு நிலமை இன்னும் மோசமாகியிருக்கிறது. இதிலும் இந்த facebook இன்னும் கொடுமையாக உள்ளது. அது தொர்டபான குறும்படம்! பார்த்து மகிழுங்கள்,

Thursday, July 16, 2009

கனடாவில் இப்படியும் சில கூத்து....


( எனது நடனமும், சிறு பேட்டியும்)



கனடாவில் மேள..தாள கருவிகளில் ஈடுபாடு உடையவர்கள் பிரதி செவ்வாய் தோறும் இரவு வேளைகளில் Drum Circle எனும் பெயரில் ஒன்று கூடவது வழக்கம். இதில் அவரவர் தங்களுக்குப் பிடித்தமான இசைக்கருவிகளைக் கொண்டு வந்து வாசிப்பார்கள்.
இவர்களின் இசைக்கு நடனமாடவென்றே பலர் வருவதுண்டு! மது மற்றும் போதைப் பழக்கம் உள்ளவர்கள் அதிகமாக வருகைதருவர் . ஆனாலும் நகரசபை இதற்கு உரிய அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடக் கூடிய விடயம்.

நகரத்தில் பொது இடத்தில் குடிப்பது சட்டப்படி குற்றமானாலும் இங்கு குடிப்பதோ அல்லது பொதைப் பொருள் பாவிப்பதையோ! பொலீஸார் கண்டும் காணமல் விட்டு விடுவார்கள்.

கடந்த செவ்வாய்கிழமை cherry Beach Toroto ல் நடைபெற்றது அதில் நானும் பங்கு பற்றியிருந்தேன். யாரோ முதல் நாள் காணாமல் சென்றதாக கூறி பொலீஸார் கடற்கரையில் தேடுதல்களில் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் குடிபோதையில் இருந்தவர்களுக்கோ அல்லது கஞ்சா முதலான போதையை பாவித்தவர்களுக்கோ அவர்கள் எந்த விதமான இடையூறுகளையும் விளைவிக்கவில்லை. மாறாக தமது இடையூறுக்கு மன்னிக்குமாறு ஒலிபெருக்கியில் வேண்டி நின்றனர்.
கூட்டத்தின் நடுவே ஒரு பொலீஸ் அதிகாரி


பித்தன் உருவேறிய நிலையில் :)


இதற்கு நடுவே யோகா மற்றும் தியானம் போன்றவற்றுக்கான இலவச பயிற்சிகளையும் அதன் ஆர்வலர்களால் பயிற்றிவிக்கப்பட்டது. மொத்தத்தில் வெளியிலிருந்து பார்க்கும் போது இது ஒரு காலாச்சார சீர்கேடாகவோ அல்லது ஏற்க முடியாத விடயமாகவும் தொன்றலாம். ஆனால் உள்ளே சென்று அனுபவித்து விட்டு அன்னத்தைப் போல பாலை மட்டும் பிரித்தெடுத்து அருந்தும் திறமை உமக்கும் இருந்தால்; இவை போன்ற நிகழ்வுகள் உங்களுக்கு பல அனுபவங்களைச் சொல்லித்தரும்.

இந்த நிகழ்வின் அறித்தல்களுக்குரிய தளம் http://drummersinexile.com

Monday, April 13, 2009

ஒட்டோவாவில் அலையாக திரளும் மக்கள்!






நான் பொதுவாக இங்கு நடைபெறும் நிகழ்வுகளை வலையில் ஏற்றுவதில்லை ஆனாலும் twitter ல் அவ்வப்போது அவ்விடங்களில் இருந்து பதிவேற்றியிருக்கிறேன். நீண்ட காலத்திற்குப் பின் (ஓரு வாரத்திற்க்கும் மேலாக) தற்பொது ஒரு நீண்ட ஒரு ஒய்வு எடுத்தாகி விட்டது. நடந்த நிகழ்வுகளை சுருக்கமாக பகிர்ந்து கொள்கிறேன்.

கடந்த திங்கட் கிழமை!
காலை 10 மணியளவில் இலங்கை அரசாங்கம் இரசாயன ஆயுதம் பாவித்ததை அறிந்து தமிழ் உணர்வு இளையோர்களிடையே ஏற்பட்ட ஓர் எழுச்சி toronto Queen park ல் திரள ஆரம்பித்தனர். அது ஒரு தன்னெழுச்சியான போராட்டம் அங்கே தொடர்ந்து போராட்டம் செய்வதென முடிவெடுத்து இரவிரவாக இடம் பெற்ற வேளையில் தமிழ் சமூகம் ஒட்டோவாவில் நடத்துவதென முடிவெடுத்து மக்களுக்கு அழைப்பு விடுத்தது.

செவ்வாய் கிழமை
அதையடுத்து குயின் பார்கிலிருந்து புறப்பட்டு ஒட்டாவா போய் சேர்ந்தோம். ஆரம்பத்தில் அமைதியாக பார்லிமென்ட் முன்னாலே மக்கள் அமைதியாக ஆர்பாட்டங்களில் ஈடுபட்டனர் தீடீரென உத்வேகம் கொண்ட மக்கள் Wellington ஆகிய வீதிகளில் வீதி மறியல்களில் ஈடுபட்டனர்.


புதனிரவு வரை வீதிமறிலில் ஈடுபட்டனர்.

வியாழன் மதியம் பெருமளவில் குவிக்கப்பட்ட பொலிசார் வீதிகளில் அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரங்களை அகற்றியதுடன்.அங்கு வைக்கபட்டிருந்த உணவுப் பொருட்களையும் எடுத்துச் சென்றனர்

வெள்ளி மற்றும் சனி ஞாயிறு தினங்களில் பெரும் திரளாக மக்கள் திரண்ட வண்ணமுள்ளனர். ஆனாலும் அங்கு அமைதியான வழியில் போராட்டங்கள் நடக்கின்றன.

இதற்கிடையில் அங்கு ஐவர் உண்ணா நிலையை ஆரம்பித்திருக்கிறார்கள்.

(அந்த இறுதிப் போட்டோவில் தலைக்கு முக்காடு போட்டபடி கழுத்தில கமராவோட இருக்கிற பையன யாருக்கும் தெரியுமே!)


சில செய்தி இணைப்புக்கள்
ottawa citision 1

A well-mobilized, orchestrated campaign


வக்தா tv

Friday, February 20, 2009

வயது வந்தவர்களுக்கு மட்டும்! படம் வரைதல் தப்பா????

டைட்டானிக்கில் வரைந்தால் ரசிக்கிறாங்கள் நாம வரைந்தா திட்டுறாங்க! நீங்களே பார்த்துச் சொல்லுங்க! இப்படியெல்லாம் வரைந்தா தப்பா???????????ஃ





Friday, February 13, 2009

காதலர் தினம்??

Friday, January 30, 2009

உறையும் குளிருக்குள்ளும் உணர்வு பொங்கி வழிந்த காட்சிக்கள்!








Torontoவில் இன்று வெள்ளி நண்பகல் 12 மணியளவில் Downtown பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என் அறிவிக்கப்பட்டது. 1 மணியளவில் 24 செய்திச் சேவை அங்கிருக்கும் நிலமையை "நூற்றுக்கணக்கானவர்களே பங்கு பற்றியிருப்பதாகவும், அதை ஒழுந்கு செய்தவர்கள் 30,000 பேரை எதிர்பார்ப்பதாகவும் கூறியது."

நேரம் செல்லச் செல்ல -14c என்ற உறை குளிர் நிலையிலும் மக்கள் அலை ஒவ்வொரு subway வாயில்களுக்காலும் பொங்கியெழ தொடங்கியது. அதே தொலைக்காட்சி 2.15க்கு அதை 25,000 க்கு மேற்பட்ட மக்கள் என ஊர்யிதம் செய்ததுடன் அதை hailstorm எனவும் வர்ணித்ததாம். எங்கும் மக்கள் வெள்ளம். அதனிடையே பலர் மேளதாள வாத்தியங்களுடனும் சவப்பொட்டி தூக்கியவாறும், தமது சிறிலங்கா எதிப்பைக் காட்டினர்.

இரு இளைஞர்கள் குண்டுத் தாக்கதலில் காயப் பட்டவர்கள் போல் வேடமணிந்து வந்திருந்த ஊடகங்களினதும், மக்களினதும் மனதைக் ஈர்த்ததுடன். தமிழீழ நிலமைகளை மக்கள் கண்முன்னே கொண்டு வந்தார்கள் என பலரும் பேசக் கேட்க முடிந்தது.

Tuesday, January 27, 2009

கல்மடுல குளம் உடைப்பின் அவிழ்க்கப் படாத முடிச்சுகளும்!.. வன்னிப் பேரவலமும்

சனிக்கிழமை தமிழ் இணைய வெளியெங்கும் ஒரே பரபரப்பு, கல்மடுவக் குளம் உடைக்கப் பட்டதாகவும், அதனால் பலநூறு இராணுத்தினர் பலியானதாகவும்: முதலிலே ஐந்நூறு என இருந்த இந்த எண்ணிக்கை பின் மூவாயிரம், நாலாயிரம் என ஏதோ பங்குச்சந்தைச் சுட்டெண் போல அதிகரித்துக் கொண்டே சென்றது. மன்னிக்கவும் அதிகரிக்கப்பட்டது!

இது வதந்தியாக வைத்துக் கொண்டாலும் குளம் ஏனோ உடைக்கப்பட்டது உண்மைதான்: அலறியடித்த படி தனது பாதுகாப்புத் தொடர்பான இணையத்திலே இச்செயலை ஒரு மனிதாபிமானமற்ற செயலென்றும் (inhuman act) மிக வன்மையாக கண்டிப்பதாகவும் உலக நாடுகளும் இதைக் கண்டிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது. இதைப் பார்த்த எமது வலைபூ மற்றும் இணைய வல்லுனர்கள் பல்வேறு வகையான தத்தமது ஊகங்களை வெளியிட்டனர்.

அவற்றையும் மிஞ்சி சில தளங்கள் யாழ்ப்பாணம் ஊடறுப்பு எனவும், இருகிபிர் விமானங்கள் வீழ்த்தப்பட்டன எனவும், பல்வேறு வகையான செய்திகளை வெளியிட்டன. இவை உண்மையா? இல்லையா? என சிந்திப்பதற்க்கு இடையில் முல்லைத்தீவு படையினரிடம் வீழ்ந்தது, என்கின்ற செய்தி ஆதாரத்தோடு வெளிவந்து அனைத்து ஊகங்களையும் உறங்குநிலைக்கு இட்டுச் சென்றது.

அன்றைய நிகழ்வுகளை இருவேறு வகைகளாக பிரித்து ஆராயலாம்.

1) குள உடைப்பின் சேதங்கள் குறிப்பிடும் படி இருந்திருப்பின், அவற்றை வெளியிடமுடியாத படி இலங்கை அரசாங்கம் தனது இரும்புக்கரம் கொண்டு ஊடக வாய்களை அடைத்திருக்கிறது.
ஆகவே, அங்கிருந்து செய்திகள் வரா! நான் கடந்த ஞாயிறு காலை (இலங்கை நேரப்படி) சக்தி FM இன் செய்தியறிக்கையைக் கேட்ட போது! அது கண்டியில் மோட்டார் வாகன விபத்தில் இருவர் காயம் எனும் செய்தியை தனது முதன்மைச் செய்தியாக வெளியிட்டது. இதனூடாக, இலங்கை ஊடகங்களின் நிலமை தெளிவாக புரிய வருகிறது.

சரி! அப்படியாயின் இராணுவத்துக்கு ஏற்பட்ட இழப்பை புலிகள் மறைக்கக் காரணம் என்ன???... அங்கு சில வேளைகளில் புலிகளின் கைகள் ஓங்கிய வாறு ஒரு யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கலாம். மற்றது! முக்கியமாக தமது அரசியல் முன்னெடுப்புக்களுக்கு இத்தகைய தாக்குதல்கள் பங்கம் விளைவிக்கலாம் என அவர்கள் நினைக்கலாம். அதற்கு அரசின் ஊடகத்தடை அவர்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது கூட..

2)இராணுவத்திற்கு குறிப்பிடும் படி இழப்புக்கள் இல்லை எனில் புலிகள் மெளனம் சாதிப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை, ஆனால் அரசாங்கம் அலறியடித்தது ஏன் என்பதே கேள்வி!
புலிகளின் கட்டுடைப்பினால் இராணுவத் தரப்பு தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருக்கலாம். அதனால் ஏற்பட்ட அதிர்வின் விளைவாக இருந்திருக்கலாம்.

வலைப்பதிவு பக்கம் வந்தோமாயிருந்தால் பெரும்பாலான ஈழ(புலி) ஆதரவு எழுத்தாளர்கள். அந்தச் செய்தியை முதன்மைப் படுத்தி வெளியிட்டனர். முதலிலே சக்கடத்தாரின் வலைபூவிலே கொழுவி இழப்பு தொடர்பான செய்திகள் வதந்தி என்று பின்னூட்டமிட்டு விட்டு தனது பதிவையும் அழித்து விட்டார்.(நான் அவர் பதிவை வாசிக்கவில்லை)இத்தருணத்தில் இணைய தளங்கள் எங்கும் ஓரளவு அடக்கிவாசிக்க ஆரம்பித்தன.

-------------------------------------------------------------------------------------

வன்னியிலே தனது இன அழிப்புப் போரை மிகவும் உக்கிரமாக மேற்கொண்டிருக்கும். இராணுவம் அங்கு, எதிலிகளான மக்களை குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கில் மக்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள். அதை தமிழ்வலைப்பூக்கள் அழுது வடித்துக் கொண்டிருக்கின்றன. என்னைப் பொறுத்தவை இணையத்தில் ஊலா வருகிற 95% மான தமிழருக்கு அங்கு நடப்பது தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. மற்ற அந்த ஐந்து வீதமானோரும் நீங்கள் என்ன சொன்னாலும் கேட்காத செம்மறியாட்டுக் கூட்டங்கள் அவர்களுக்காக நேரத்தை செலவிடுவதை விட நீங்கள் வசிக்கும் அந்தந்த நாடுகளின் தேசிய ஊடகங்களுக்கு மின்னஞ்சல் செய்வதன் மூலம் மற்றை இனங்களுக்கு எமது பிரச்சினையை கொண்டு செல்ல வாய்ப்பிருக்கிறது. இது தமிழக உறவுகளுக்கும் பொருந்தும்.

நீங்கள் மின்னஞ்சல் செய்யும் போது கவனிக்க வேண்டியது
*ஓரே மின்னஞ்சலை பலரும் அனுப்பாதீர்கள். அவரவர் தத்தமது சொந்த கருத்துக்களை எழுதுங்கள்.
*உங்கள் பிரச்சினையை மட்டும் எழுதுங்கள் எவரையும் திட்டியோ அல்லது நீங்கள் உணர்ச்சி வசப்பட்டோ எழுத வேண்டாம்.

எமது வீட்டு இழவை எமக்குச் சொல்வதற்க்கு ஆயிரம் வலைபூக்களை காட்டிலும் இது நல்லதாக இருக்கும். என்பதே! எனது சொந்தக் கருத்து,

சிந்தியுங்கள்! செயற்படுங்கள் நாளை நமதே!

(பின்னூட்டங்கள் மட்டறுக்கப் படவில்லை)