Monday, October 27, 2008

ஈழம் வாழ தமிழ்நாடு கைகொடுக்கும்....

தமிழக உறவுகளே இரத்தம் சிந்தும் எனது உறவுகளுக்காக பொங்கு தமிழ் உண்ணாவிரதம் ஆர்பாட்டம் என அனைத்தையும் செய்து களைத்துவிட்டோம்.

தமிழீழ மக்களின் வாழ்வை கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் எதிரி தனது நேச நாடுகளின் கால்களில் விழுந்து உணவுக்கே அல்லாடுகிற நாட்டிடை குண்டுகளாலும் கனரக ஆயுதங்களாலும் நிரப்புகிறான். ஒரு வல்லாதிக்க நாட்டுடன் மோதுவது பொல மூர்க்கமாக அழித்துக் கொண்டிருக்கிறான். "அ" எழுத வேண்டிய கைகள் அங்கே சிதைக்கப்படுகின்றன.

உங்களால் முடியும் தமிழக உறவுகளே தூங்கும் அனைத்து தமிழக உறவுகளும் விழித்தெழுங்கள் உமை விட்டால் எமக்கு வேறு நாதியில்லை கரம் கொடுங்கள். இதை விட்டால் தமிழனில் சாம்பல் மேட்டிலேதான் அனைவரும் கண்ணீராலே கருமாதி செய்ய நேரிடும் இதை விட்டால் வேறு தருணம் கிடையாது.

"ஒன்று படுவோம் வென்று விடுவோம்"
(((தவறாது வீடியோ பாடல்களை கேட்கவும்)))

0 comments: