Sunday, January 13, 2008

ஹி..ஹி சிரிங்க..!

நம்மட இரண்டு பேர் பிரான்ஸ் போய் வாழ்க்கையை தொடங்கினார்கள் அவர்கள் அங்க வேலைக்கு போவதும் வழக்கம் அங்கேயும் ஊரைப் போல சாப்பாடு கட்டிக் கொண்டு போவது வழக்கம். அவர்கள் வழமையாக வேலைதளத்தில்தான் உணவருந்துவது வழக்கம். அன்று ஒருவன் சொன்னான் "வா இன்று நாம் ஏதாவது உணவகத்துக்குப் போய் ஒரு குளிர்பாணத்தோடு உணவை அருந்துவோம்" என்று அதற்க்கு மற்றவனும் ஆமோதிக்கவே இருவரும் ஒரு உணவகத்தை அடைந்தனர். ஒவ்வொரு குளிர்பாணத்தை ஓடர் செய்து விட்டு தங்கள் உணவு பொட்டலங்களை பிரித்து உண்ண ஆரம்பித்த வேளை அங்கே வந்த உணவக மேலாளர் "இங்கே உங்கள் சொந்த உணவுகளை நீங்கள் உண்ணுவதை அனுமதிக்க முடியாது" என்றார் உடனே அவர்கள் "சரி சார்" என்று தலையசைத்து விட்டு தங்கள் உணவுப் பொட்டலங்களை மாற்றி உண்ண ஆரம்பித்தார்கள்

2 comments:

வடுவூர் குமார் said...

ஹா! ஹா!
அப்படிப் போடுங்க.

தமிழ்பித்தன் said...

நன்றி! பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா!