Thursday, January 31, 2008

தமிழச்சியின் அண்மைய பதிவுகளால் குழம்பிப்போன நாகரீக குஞ்சுகள்

எது நாகரீகம் என்கிறாய்!
அன்பான வார்த்தை கதைத்து
இடையே "அன்பே சிவம்" என்றும்
பசுவைத் தெய்வம் என்றும்
கூறி...

மனிதத்ததை அடிமையாக்கி
பரதேசிபோல் நோக்கும்
நீதான் நாகரீக கோமாளி!

திரோபதைக்கு துயிலளிக்கும் கண்ணண்
போருக்கு கணவரை தூண்டிவிட்டு
இரத்த களறி ஓட விட்ட
கதை கேட்டுப் பூரித்துப் போன
புனிதக் குஞ்சுகளே உன்னருகில்
எத்தனையர் துயிலின்றி
அதை நினையாத
நீதான் நாகரீக கோமாளி!

தர்மங்கள் அழிந்து அதர்மம் ஓங்கும் போது பிறப்பெடுக்கும்
கண்ணணிடம் ஓர் கேள்வி தர்மம் ஒரு கிலோ என்ன விலை??

0 comments: