Saturday, December 15, 2007

காதலின் அறிகுறிகள் (இது காதல் காலம்)


காதல் புனிதமானது அதை எனது கவிதை மெரு கேற்றா விடினம் கொஞ்சமேனும் இழிவு படுத்தாமல் இருந்தால் சரி

காதலின் அறிகுறிகள்

அப்பன் அரக்கன் ஆவார்
அம்மா தோழியாவாள்
சகோதரன் இராவணன் ஆவான்
சகோதரியோ சூர்பனகையாவாள்

குளியலறை சுவர்க்கமாகும்
கட்டில் நரகமாகும்
காதலியை காணும் நேரம் நிமிடமாகும்
காதலியை காணா நேரம் வருடாகும்

அவளை சுற்றும் மற்றவருக்கு
நீ அசுரன்
அவளின் சிறுபுன்னகைக்கு தவமிருப்பதில்
நீ வசிட்டர்
அவர்கள் தாய் தந்தை உன்னைக் கண்டால்
நீ காந்தி

அவள் வருகையை எண்ணி- உன்
கண்கள் பூத்திருக்கும்
கால்கள் வியர்த்திருக்கும்
மூக்கு பனித்திருக்கும்
காதுகள் ஏனோ சலித்திருக்கும்

காகிதம் கடவுளாகும்
பேனா கவிதை கோட்டும் அருவியாகும்
காகிதக் கழிவால் குப்பைக் கூடை நிரம்பும்
உன் வானோலி காதல் கீதம்மட்டுமே ஒலிக்கும்

இவையேதும் உன்னில் நீ உணரா விடின் கட்டாயம் காதலித்துப்பார்
இக் காதலின் அறிகுறிகளை நீ உணர்வாய்!

காதல் இம்சை தொடரும்.......

0 comments: